குடை..!
கிழிந்து விட்டது குடை,
இனி அழகாய் ரசிக்கலாம்
-மழை
பால்..!
பாலுக்காக அழும் குழந்தை
பால் குடிக்கும் பிள்ளையார்
இப்படிக்கு- சமுதாயம்
சத்தம்...!
துப்பாக்கியின் உண்மையான சத்தம் ,
போரில் அடிப்பட்ட
குழந்தையின் அழுகையில் கேட்கிறது..!
கொலை...!
கொலை செய்துவிட்டு உறங்கினேன்,
இரவில் கொசுக்கள்...
நிகழ்வுகள்...!
யாரும் தொடவில்லை...!
யரும் பறிக்க வில்லை..!
ஆயினும் ,
இலைகள் உதிரும்...!
கரிப்பு....!
"அம்மா ,கடல் ஏன் கரிக்கிறது"
என கேட்ட மகனை நோக்கி
ஈழத்தமிழ் தாய் சொன்னாள்,
-" நமது கணணீரில்" என்று..!
காலயந்திரம்...!
நினைத்த வேளையில்,
நினைத்த காலத்திற்கு
இட்டு செல்லும்,
நினைவுகள்-ஓர் காலயந்திரம்..!
உழைப்பின் நிழல்...!
உழைப்பின் நிழலில் தினமும் உறங்கும்,
மனிதன் - கீழே,
மின்விசிறி-மேலே...!
Friday, March 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment