Friday, March 26, 2010

என் கவிதைகள். ....

முத்த கல்வி.....
முத்த கல்வி நடக்கிறது வகுப்பறையில்,
அதனால் கல்வி ஒளி எங்கும் பிறக்கிறது ,
-கரும்பலகையில் சாக்பீஸ் ....!

கோபம்....
காற்றுகூட ஒரு நாள்
என் மீது கோபம் கொண்டது,
அப்போது தெரிந்தது
நான் இறந்து விட்டேன் என்பது...!

வேள்வி....
மரம் வெட்டி நடக்கிறது,
மழை வர வேண்டி வேள்வி...!

கனவு..!
விழித்திருந்தேன்,
உறங்கிவிட்டேன்,
எழுந்து பார்த்தால் கனவு...!

வாசம்...!
பூவாசம் தந்த,
ஆசையில் பிறந்த
ஓசைகள் நாம்...!

கொலை...!
கொலை செய்துவிட்டேன்,
குற்றம் யாருடையது
கத்தியுடையதா...?
என்னுடையதா..?

No comments:

Post a Comment